Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

Prasanth Karthick
வெள்ளி, 24 மே 2024 (18:55 IST)
இன்று இறுதி போட்டிக்கு முன்பான குவாலிபயர் போட்டி நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இறுதி போட்டிகளில் மோதிக் கொள்ள போகும் அணிகளுக்கு பேனர் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தேர்வான 4 அணிகளுக்கு இடையேயான குவாலிபயர் போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் குவாலிபயர் 2 போட்டி நடைபெற உள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.

இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும். அந்த இறுதி போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று போட்டி இன்னும் தொடங்காத நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஃபைனல்ஸில் மோதும் அணிகளுக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில் கொல்கத்தா அணி பேனருக்கு எதிரில் சன்ரைசர்ஸ் பேனர் உள்ளது. ஆனால் இன்று சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தானை வெற்றி பெற்றால்தான் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். அதற்குள் எப்படி சன்ரைசர்ஸ்க்கு பேனர் வைத்தார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments