Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

Mahendran
வெள்ளி, 24 மே 2024 (16:28 IST)
இந்திய அணி பயிற்சியாளராக நியமனம் செய்ய தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்த நிலையில் இந்திய அணி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்பட ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் பிசிசிஐ அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 
 
நானோ அல்லது பிசிசிஐயை சேர்ந்த எந்த அதிகாரிகளோ ஆஸ்திரேலியா வீரர்கள் யாரையும் இந்திய அணியின் பயிற்சியாளருக்காகஅணுகவில்லை என்றும் இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தவறானது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
இந்திய அணிக்கு சரியான பயிற்சியாளரை கண்டுபிடிப்போம் என்றும் இந்திய அணியை புரிந்து கொண்ட நபரை அடையாளம் காணுவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஆழ்ந்த அறிவு கொண்டிருக்க வேண்டும் என்பதை நாங்கள் வைத்திருக்கும் அளவுகோல் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஒரு பில்லியன் ரசிகர்களின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய பணி என்பதால் இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியான நபரை விரைவில் பிசிஐ தேர்வு செய்யும் என்றும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய அணி பயிற்சியாளர் ஒரு  இந்தியர் ஆக மட்டுமே இருக்க முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 வீரர்களுக்கும் சமமான மரியாதை… கௌதம் கம்பீர் கருத்து!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

என் மகளுக்கு முகமது ஷமியோடு திருமணமா?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா மிர்சா தந்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments