Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா கைது செய்யப்படுவாரா?

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (12:47 IST)
அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா (24). இவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை ஒன்றை வெளியிட்டார், அதில் எந்த அம்பேத்கர் ஒரு குறுக்குத்தனமான அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரா அல்லது இடஒதுக்கீடு எனும் நோயை நாடு முழுவதும் பரப்பியவரா என பதிவிட்டிருந்தார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த சம்பவம் தொடர்பாக டி. ஆர் மேவால் என்பவர் ஹர்திக் பாண்ட்யா கருத்து அம்பேத்கரை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
 
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம்,  ஹர்திக் பாண்டியா மீது வழக்கு பதிவு செய்து போலீசாரை விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments