Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (05:20 IST)
ஜிம்பாவே நாட்டில் உலகக்கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் நேற்று மேற்கிந்திய தீவுகள் அணி, ஸ்காட்லாந்து அணியை வென்று தகுதி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ஸ்காட்லாந்து தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, கிறிச்கெயில் விக்கெட்டை முதலிலேயே இழந்தது. இருப்பினும் சாமுவேல்ஸ், லீவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஆனால் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் அந்த அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 198  ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனால் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற இன்னும் 74 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உலக கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments