Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

vinoth
வியாழன், 27 மார்ச் 2025 (09:47 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தொடரோடு ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிசிசிஐ, ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரை சம்பளப் பட்டியலில் A+ பிரிவில் இருந்து A பிரிவுக்கு கீழிறக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் மூவரும் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகப்போகிறது. அதனால் அவர்களை A பிரிவுக்கு மாற்றி சம்பளத்தைக் குறைக்க பிசிசிஐ நினைப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments