Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியின் விதியை மாற்றிய அந்த 8 ஓவர்கள்… கலக்கிய இந்திய சுழலர்கள்!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (07:24 IST)
உலகக் கோப்பை இறுதி தோல்விக்கு ஆறுதலாக இந்திய அணி இப்போது ஆஸ்திரேலிய அணியை டி 20 தொடரில் வீழ்த்தியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நான்காவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார். 

இதன் பின்னர் ஆடிய ஆஸி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதில் முதலில் பவர் ப்ளே ஓவர்களில் ஆஸி அணி அதிரடியாக விளையாடும் போது கண்டிப்பாக வெற்றி பெறும் என தோன்றியது.

ஆனால் இந்திய சுழலர்களான அக்ஸர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் அட்டாக்குக்கு வந்த பின்னர் போட்டி இந்தியா பக்கம் சாய்ந்தது. இருவரும் இணைந்து 8 ஓவர்கள் வீசிய் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி, போட்டியை இந்திய அணியின் கைகளுக்குள் கொண்டு வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து வீசிய 48 பந்துகளில் 26 பந்துகள் டாட் பந்துகளாக அமைந்தது ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் அழுத்தத்தை தந்தது. இவர்களின் சிறப்பான ஸ்பெல்லால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Keep calm and believe in kohli… ஆதரவாக பேசிய கெய்ல்!

இரட்டை சதமடித்த சஃபாலி வெர்மா... இந்திய மகளிர் அணியின் முதல் நாள் ஸ்கோர்..!

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்- இங்கிலாந்து வீரரை சாடிய ஹர்பஜன் சிங்!

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments