Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தபோது முடி அதிகமாகக் கொட்டியது- மேத்யூஸ் ஜாலி பேச்சு!

Advertiesment
இலங்கை

vinoth

, செவ்வாய், 17 ஜூன் 2025 (11:21 IST)
இலங்கை அணியில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியவர் ஏஞ்சலோ மேத்யூஸ். இலங்கை அணி தனது ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ஜெயசூர்யா, சங்ககரா, ஜெயவர்த்தனே போன்றவர்களை இழந்தபிறகு அந்த அணி சரிவை சந்தித்தது. ஆனால் அந்த காலத்தில் தோன்றிய ஒரு திறமையான வீரராக மேத்யூஸ் கருதப்படுகிறார்.

இலங்கை அணியை அனைத்து விதமானப் போட்டிகளிலும் அவர் வழிநடத்தியுள்ளார். சமீபத்தில் ஓய்வை அறிவித்த அவர்  இலங்கை அணியை வழிநடத்தியது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் இலங்கை அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வழிநடத்திய போது எனக்கு அதிகமாக முடிக் கொட்டியது. எல்லா வீரர்களுக்கும் இது நடக்கும் என நினைக்கிறேன்.

இலங்கை அணியாக இருந்தாலும், எந்த அணியாக இருந்தாலும் கேப்டனாக இருக்கும் போது உங்கள் தலையில் முடிக் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் கேப்டன் என்பது ஒரு பொறுப்பு. அனைவரின் பார்வையும் உங்கள் மீது இருக்கும்.  அந்த பொறுப்பு வலியாக இருந்தாலும் நான் அதை அனுபவித்தே செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்.. 3வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி..!