Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனிக்குப் பிறகு கேப்டனாக அந்த மோசமான சாதனையைப் படைத்த ரோஹித் ஷர்மா!

தோனிக்குப் பிறகு கேப்டனாக அந்த மோசமான சாதனையைப் படைத்த ரோஹித் ஷர்மா!
, வியாழன், 8 டிசம்பர் 2022 (07:50 IST)
இந்திய அணி பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியை தோற்று தொடரை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பங்களாதேஷ் அணி  சிறப்பாக விளையாடிய  நிலையில், 271 ரன்கள் என்ற ஸ்கோரை பங்களாதேஷ் எட்டி, இந்தியாவுக்கு 272 ரன்கள் இலக்காக  நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன் கள் எடுத்தனர். எனவே, பங்களதேஷ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது.

இந்த தோல்வி மூலம் இந்திய அணி, தொடரை இழந்துள்ளது. பங்களாதேஷ் அணியிடம் ஒருநாள் தொடரை இழந்த கேப்டன்கள் வரிசையில் தோனிக்குப் பின்னர் இப்போது ரோஹித் ஷர்மாவும் இணைந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கையில் தையலோடு கடைசி வரை போராடிய ரோஹித்… ரசிகர்கள் பாராட்டு!