Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுவி ஊற்றினாலும் கண்டுகொள்ளாத அப்ரிடி! – கடுப்பான இந்திய வீரர்கள்!

Webdunia
வியாழன், 28 மே 2020 (11:13 IST)
இந்தியா குறித்தும் பிரதமர் குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி பேசியதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் நிதி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மனிதாபிமான அடிப்படையிலேயே நிதி அளித்ததாக ஹர்பஜன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அப்ரிடி இந்தியாவையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங் “அப்ரிடி தனது அறக்கட்டளைக்காக உதவும்படி கேட்டுக்கொண்டார். மனிதாபிமான அடிப்படையிலேயே கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்காக உதவினோம். ஆனால் அந்த மனிதர் இப்போது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இனி அவரோடு எந்த ஒட்டும் உறவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

அதுபோலவே யுவராஜ்சிங், கௌதம் கம்பீர் உள்ளிட்டவர்களும் அப்ரிடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சாஹித் அப்ரிடி ”நான் எப்போது ஹர்பஜன் மற்றும் யுவராஜுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். அவர்கள் அந்த நாட்டில் இருக்கிறார்கள். அவ்வாறு பேச அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments