Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

vinoth
செவ்வாய், 25 ஜூன் 2024 (14:35 IST)
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 115  ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 19 ஓவர்களில் 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிய நிலையில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதன் முதலாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆப்கானிஸ்தான் அணிக் கேப்டன் ரஷீத் கான் “எங்களைப் போன்ற அணிகளுக்கு அரையிறுதி என்பது பெரிய கனவு. நியுசிலாந்து அணியை லீக் சுற்றில் வென்ற போது கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. இப்போது மேலும் சந்தோஷமாக உள்ளது. இந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments