Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 30 மே 2025 (12:28 IST)
17 ஆண்டுகளாக ஆர் சி பி அணியும் அதன் ரசிகர்களும் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த ஐபிஎல் கோப்பை, கைக்கெட்டும் தொலைவுக்கு இந்த முறை வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரைக் கோப்பையே வெல்லாத அணி என்றாலும் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக உள்ளது ஆர் சி பி.

இதற்கு முன்னர் 3 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அந்த அணி சென்றுள்ளது. 10 முறை ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கு சென்றுள்ளது. ஆனாலும் கோப்பைக் கனவு பலிக்கவில்லை. இதை வைத்தே மற்ற அணி ரசிகர்கள்  ‘ஆர்சிபி’ அணியைக் கலாய்ப்பதும் உண்டு. ஆர் சி பி அணியின் ஸ்லோகனான ‘ஈ சாலா கப் நம்தே (இந்த முறை கோப்பை நமக்குதான்)’ என்பதை வைத்து அதிகமாக அந்த அணி கேலி செய்யப்படுவதுண்டு.

ஆனால் இந்த ஆண்டு அந்த வாக்கியத்தை அவர்கள் எங்குமே பயன்படுத்தவில்லை. இதுபற்றி பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் “ஆர் சி பி அணியின் நேரம் வந்துவிட்டது.  ஆர் சி பி இத்தனை தூரம் முன்னேறிவிட்டது. ஆனால் நான் ‘ஈ சாலா கப் நம்தே’ என்பதை சொல்ல கோலி என்னை அனுமதிக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு நாங்கள் முழுமை அடைவோம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments