Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் ஒரு போட்டிதான்… பின்னர் சேர்ந்து கொண்டாடுவோம்- ஆர் சி பி கேப்டன் ரஜத் படிதார் மகிழ்ச்சி!

Advertiesment
ஐபிஎல்
, வெள்ளி, 30 மே 2025 (08:32 IST)
ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. வெறும் 102 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, மிக எளிதில் பஞ்சாப் அணியை வீழ்த்தியவுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது பெங்களூர் அணி, இந்த ஆண்டு ரஜத் படிதார் தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்ட நிலையில் அதற்குப் பலனாய் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

வெற்றிக்குப் பின்னர் பேசிய ரஜத் படிதார் “ஆர் சி பி அணி ரசிகர்களுக்கு நன்றி. பெங்களூர் மட்டும் இல்லாமல் எங்கு சென்றாலும் சொந்த மைதானம் போல் ஆதரவு அளித்து வந்தனர். அவர்களுக்கு நன்றி. இன்னும் ஒரு போட்டிதான். அதன் பிறகு சேர்ந்து கொண்டாடுவோம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெங்களூரு வெற்றி அடைந்தவுடன் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அனுஷ்கா.. வீடியோ வைரல்..!