Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ளே ஆஃப் போட்டிகளில் எளிதான வெற்றி… வரலாற்றுச் சாதனைப் படைத்த RCB!

Advertiesment
ஐபிஎல்

vinoth

, வெள்ளி, 30 மே 2025 (08:38 IST)
ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. வெறும் 102 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, மிக எளிதில் பஞ்சாப் அணியை வீழ்த்தியவுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பெங்களூர் அணியில் சுயாஷ் ஷர்மா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து பேட் செய்ய வந்த பெங்களூரு அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் ஃபில் சால்ட் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக 10 ஆவது ஓவரின் முடிவில் இரண்டு விக்கெட்களை இழந்து பெங்களூர் அணி இலக்கை எட்டியது.

ஒரு ப்ளே ஆஃப் போட்டியில் அதிக பந்துகள் மீதமிருக்க வெற்றியைப் பெற்ற அணி என்ற சாதனையை இந்த வெற்றியின் மூலமாகப் பெற்றுள்ளது பெங்களூர் அணி. இதன் மூலம் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது பெங்களூரு அணி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் ஒரு போட்டிதான்… பின்னர் சேர்ந்து கொண்டாடுவோம்- ஆர் சி பி கேப்டன் ரஜத் படிதார் மகிழ்ச்சி!