Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய நடிகர், நடிகைக்கு சம்மன்

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (13:04 IST)
பொது நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷெட்டிக்கு ராஜஸ்தான் காவல் நிலைய தரப்பில் சம்மம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 22ந் தேதி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல பாலிவிட் நடிகர்  சல்மான் கான் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி, தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதாக, அவர்கள் மீது ரோஜ்கார் அகாரி குடியரசுக் கட்சி சார்பில் மும்பையில் புகார் அளிக்கப்பட்டது. ராஜஸ்தானைச் சேர்ந்த தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான அந்த வார்த்தையை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் சாரூ மாவட்ட  டி.எஸ்.பி சம்மன் அனுப்பியுள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, விழாவில் நான் பேசிய வார்த்தைகளில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். மேலும் நான் கூறிய கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

விடுமுறை நாட்களில் கூட சுனக்கம் காட்டிய ‘ரெட்ரோ’ வசூல்… முதல் வார கலெக்‌ஷன் விவரம்!

பழங்குடியினர் பற்றி அவதூறுப் பேச்சு… விஜய் தேவரகொண்டா மேல் வழக்கு!

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments