Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாவோஸ் நாட்டில் டன் கணக்கில் போதை மருந்து பறிமுதல்: வரலாறு காணாத குவியல்

Advertiesment
லாவோஸ் நாட்டில் டன் கணக்கில் போதை மருந்து பறிமுதல்: வரலாறு காணாத குவியல்
, வெள்ளி, 29 அக்டோபர் 2021 (11:22 IST)
லாவோஸ் நாட்டு காவல் துறை ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய போதை மருந்துக் குவியலைக் கைப்பற்றியுள்ளது.

5.5 கோடி மெதாம்பிடமின் மாத்திரைகள் மற்றும் 1.5 டன்னுக்கும் அதிகமான கிறிஸ்டல் மெத் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றப் பிரிவு முகமை கூறியுள்ளது.
 
இது ஆசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப் பெரிய அளவிலான போதை மருந்து குவியல் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.
 
தாய்லாந்து மற்றும் மியான்மர் எல்லைப் பகுதியான பொகெயோவில், பீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதித்த போது இத்தனை பெரிய அளவில் போதை மருந்து கடத்தப்படுவது தெரியவந்தது. தங்க முக்கோண சாலை என்று அழைக்கப்படும் இந்த பகுதி, பல ஆண்டு காலமாக போதை மருந்து தயாரிப்பின் சொர்க்கபுரியாக இருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை!