'தொழில்நுட்ப' இசை கேட்பதை நிறுத்த வேண்டும் - இளையராஜா

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (10:45 IST)
சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
''நான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரி உள்ளன. இதில் வேறுபாடுகள் இல்லை. எல்லா பாடல்களிலும் சரிகமபதநி இருக்கும். பாடல்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது, சிந்தனையும் தேவை. நான் முதல் படத்துக்கு பெற்ற சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்.
 
பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசைகளை பாதுக்காக்க வேண்டும். தொழில்நுட்பம் பெயரில் உருவாக்கும் இசையை கேட்பதால்தான் பாரம்பரிய இசை அழிந்து வருகிறது. அதைக் கேட்பதை நிறுத்திவிட்டாலே போதுமானது. பாரம்பரிய இசை கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு இசையை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை அழிவிலிருந்து காக்க முடியும்'' என்றார் ராஜா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments