Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தொழில்நுட்ப' இசை கேட்பதை நிறுத்த வேண்டும் - இளையராஜா

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (10:45 IST)
சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
''நான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரி உள்ளன. இதில் வேறுபாடுகள் இல்லை. எல்லா பாடல்களிலும் சரிகமபதநி இருக்கும். பாடல்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது, சிந்தனையும் தேவை. நான் முதல் படத்துக்கு பெற்ற சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்.
 
பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசைகளை பாதுக்காக்க வேண்டும். தொழில்நுட்பம் பெயரில் உருவாக்கும் இசையை கேட்பதால்தான் பாரம்பரிய இசை அழிந்து வருகிறது. அதைக் கேட்பதை நிறுத்திவிட்டாலே போதுமானது. பாரம்பரிய இசை கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு இசையை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை அழிவிலிருந்து காக்க முடியும்'' என்றார் ராஜா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments