Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய தூர சீரியங்கு ஏவுகணையை பரிசோதித்தது அமெரிக்கா - ரஷ்ய ஒப்பந்தத்தில் இருந்து விலகல் எதிரொலி

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (19:21 IST)
மத்திய தூர சீரியங்கு ஏவுகணை ஒன்றை அமெரிக்கா பரிசோதனை செய்துள்ளது.


 
கலிஃபோர்னியா கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
 
இத்தகைய சோதனைகளை தடை செய்யும் வகையில், ரஷ்யா - அமெரிக்கா இடையே பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து இம்மாதம் 2-ம் தேதி அமெரிக்கா விலகியது. இதையடுத்து, தற்போது இந்த சோதனையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
 
மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.


 
500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.
 
தற்போதைய சோதனை பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்யா, ராணுவப் பதற்றத்தை அமெரிக்கா அதிகரிப்பதாக கூறியுள்ளது.
 
மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் முறிவு புதிய ஆயுதப் போட்டியை தூண்டும் என்று பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்க கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள சேன் நிக்கோலஸ் தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை அணு ஆயுதம் ஏந்திச் செல்லக்கூடியது அல்ல என்று அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments