Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸையும் மீறி தேர்தலில் வாக்களிக்கும் தென் கொரிய மக்கள்

கொரோனா வைரஸையும் மீறி தேர்தலில் வாக்களிக்கும் தென் கொரிய மக்கள்
, வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (15:02 IST)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் மீறி தென் கொரிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் திட்டமிட்டபடி தொடங்கியுள்ளது.

தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தல் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மக்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முகக்கவசமும், கையுறையும் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வரும் மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒட்டுமொத்த தென் கொரியாவிலும் இன்று (வெள்ளிக்கிழமை) 27 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை தென் கொரியாவில் 10,450 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் நோய்கட்டுப்பாட்டு மற்றும் நோய்த்தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மையமாக விளங்கிய தேகு நகரில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கூட நோய்த்தொற்று பதிவுசெய்யப்படவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா ஊரடங்கு?