Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா ஊரடங்கு?

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா ஊரடங்கு?
, வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (14:54 IST)
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 169 லிருந்து 199 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 478 லிருந்து 504 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 834 பேரும், டெல்லியில் 720 பேரும், ராஜஸ்தானில் 463 பேரும், தெலுங்கானாவில் 440 பேரும், கேரளாவில் 357 பேரும், ஆந்திராவில் 348 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகம் பாதிப்படைந்த மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பதால், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. 
 
எனவே, முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Home Quarantine: கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன??