Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுக்ரேனிய மேயர்களை கடத்தியதை கண்டித்த ஐரோப்பிய ஒன்றியம்

யுக்ரேனிய மேயர்களை கடத்தியதை கண்டித்த ஐரோப்பிய ஒன்றியம்
, திங்கள், 14 மார்ச் 2022 (10:15 IST)
யுக்ரேனின் தென்கிழக்கு நகரமான டினிப்ரோ நகர மேயரான யேவென் மட்வியேவ் என்பவரை, ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக யுக்ரேனிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.


அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மெலிடோபோலின் மேயர் இவான் ஃபெடோரோவ் என சந்தேகிக்கப்படும் ஒரு நபர், ஒரு கட்டடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதை காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது சம்பந்தமாக ட்விட்டரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் கூறியபோது, "மெலிடோபோல் மற்றும் டினிப்ரோருட்னே மேயர்களை, ரஷ்ய ஆயுதப் படைகள் கடத்தியதை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இது யுக்ரேனில் உள்ள ஜனநாயக நிறுவனங்கள் மீதான மற்றொரு தாக்குதல் மற்றும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில் சட்டவிரோத மாற்று அரசாங்க கட்டமைப்புகளை நிறுவுவதற்கான முயற்சியாகும்"என்று கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று!