Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
, வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (11:20 IST)
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: “53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு”

53 உலக நாடுகளில் 3,336 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதாக, அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பெரிய அளவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க முடியாத சூழல் உள்ளது; எனவே அவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் கேட்டுக்கொண்டன. வணிக அடிப்படையிலும், மானியமாகவும், 55 உலக நாடுகளுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.”

“மேலும், கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளை தென்கொரியா மற்றும் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ சாதனங்களை வாங்கவும் இந்தியா எண்ணி இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் கொரோனா நிலவரம்! – பாதிப்பு குறைய தொடங்கியதா?