Publish Date: Fri, 17 Apr 2020 (09:58 IST)
Updated Date: Fri, 17 Apr 2020 (10:01 IST)
தமிழகத்திலிருந்து வாரணாசி சுற்றுலா சென்றவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பது குறித்து திருவள்ளூரில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களும், மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாரணாசிக்கு சுற்றுலா சென்ற 126 பேர் ஊரடங்கால் வாரணாசியில் சிக்கிக் கொண்டதாக தெரிய வந்ததை அடுத்து அவர்கள் 3 பேருந்துகளில் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கொரோனா உள்ளதா என்பது குறித்து திருவள்ளூரில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது.