Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய வாழ்க்கைக்கு திரும்பும் ஆஸ்திரேலியர்கள்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (00:39 IST)
ஆஸ்திரேலியா, நவம்பர் மாதம் தொடங்கி தனது சர்வதேச எல்லைகளை திறக்க முடிவு செய்துள்ளது.
 
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆஸ்திரேலிய குடிமக்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் தடை விதித்தது.
 
இது கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெரிதும் உதவியது ஆனால் மக்களிடையே பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
 
பலர் தங்களின் குடும்பங்களை விட்டு நீண்டநாள் பிரிய வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
 
“ஆஸ்திரேலியர்களுக்கு தங்களின் வாழ்வை திரும்பி அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் மக்கள் அவர்கள் வசிக்கும் மாநிலங்களின் தடுப்பு மருந்து விகிதம் 80 சதவீதமாக இருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
 
அதேபோல வெளிநாட்டு பயணிகளுக்கு உடனடியாக அனுமதில்லை. இருப்பினும் அதுகுறித்து யோசித்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments