Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி- அன்புமணி ராமதாஸ்

Advertiesment
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி- அன்புமணி ராமதாஸ்
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:12 IST)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

நடைபெற்ற முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றுப் போட்டியிட்ட பாமக கட்சி வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

 
இந்த அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். மேலும் பாமக இளைரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிடும் எனவும்,  எம்.பி. எம்.எல்.ஏ தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக வரலாற்றில் முதன்முறை: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் முதல்வர்