Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒடிடியில் வெளியாகும் விஜய்சேதுபதி- நயன்தாரா படம்?

Advertiesment
Vijay Sethupathi-Nayanthara
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:09 IST)
விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளனர் .

இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் #KaathuVaakulaRenduKaadhal படத்தின் 2  பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தை  ஒடிடியில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை பிரபல  ஒடிடி நிறுவனத்துடன்  பேச்சு வார்த்தை நடந்துவதாகவும் கூறப்படுகிறாது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின்’’ ஜெய்பீம்’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு