Webdunia - Bharat's app for daily news and videos

Install App

75,000 பேரை பணியமர்த்த இருக்கும் அமேசான் நிறுவனம்

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (15:56 IST)
75,000 பேரை பணியமர்த்த இருக்கும் அமேசான் நிறுவனம்

அமேசான் ஆன்லைன் விற்பனையில் பல ஆர்டர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதால், இன்னும் நிறைய பணியாளர்களை பணியில் அமர்த்த உள்ளது அந்நிறுவனம்.

அமேசான் நிறுவனம் கடந்த மாதம் 1 லட்சம் பணியாளர்களை பணியில் அமர்த்தியது. தற்போது மேலும் 75,000 பேரை பணியில் அமர்த்தவுள்ளது.

உலகின் பல முக்கிய நாடுகள் முடக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் , பலர் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கின்றனர். எனவே தேவை அதிகரித்ததால் வரும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க இன்னும் பல ஊழியர்களை அமேசான் நிறுவனம் பணியமர்த்தவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் அமெரிக்காவின் மற்ற துறைகளில் வேலை இழந்த தொழிலாளர்களை தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அமேசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

25,000 மருத்துவ பணியாளர்களுக்கு உதவும் ஷாரூக் கான்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் 25,000 மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கள் மற்றும் ஆடைகளுக்கு தேவையான உதவித்தொகையை வழங்குவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே தனது 4 அடுக்கு மாடி அலுவலக இடத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்.

மருத்துவ பணியில் ஈடுபடுபவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இலவச உணவு அளிப்பதாகவும் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது மருத்துவ ஊழியர்களின் நலன் கருதி பாதுகாப்பு கவசங்கள் மற்றும் ஆடைகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments