Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் அழுத சிறுமியின் படத்துக்கு ' உலக விருது’ ! என்ன ஆச்சர்யம் ?

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (19:02 IST)
அமெரிக்காவில் உள்ள புகைப்படக்கலைஞர்களின் ஆகச்சிறந்த ஆசை என்னவென்றால் உலக பத்திரிக்கை புகைப்பட விருதினைப் பெறுவதுதான்.
இந்நிலையில் அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில்  ஒரு சிறுமி அழுது கொண்டிருக்கிற புகைப்படமானது உலக பத்திரிக்கை புகைப்பட விருது பெற்றுள்ளது.
 
அதாவது, கடந்த வருடம் ஜுன் மாதம் 12 ஆம்தேதி,மெக்ஸிகோ அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள்  சிலரைக் கைது செய்யப்பட்டனர்.
 
எனவே கைதான ஒரு பெண் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 
அதன் பின்னர் அக்குழந்தை இரவு நெடுநேரம் அதே இடத்தில் நின்று கொண்டு அழுதது. இக்காட்சியை அந்நாட்டு புகைப்பட கலைஞர் ஜான் தன் கேமராவில் படமாக்கினார்.
 
உலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள் தாங்கள் எடுத்திருந்த 78.801 போட்டோக்களை உலக பத்திரிக்கை புகைப்பட விருதுக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதில் ஜான் எடுத்த சிறுமி யனீலா அழுவது போன்றுள்ள இப்புகைப்படம் உலக பத்திரிக்கை புகைப்பட விருதை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments