Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலிக்கு ஓய்வு தேவை– பிசிசிஐக்கு முன்னாள் வீரர் அறிவுரை !

கோலிக்கு ஓய்வு தேவை– பிசிசிஐக்கு முன்னாள் வீரர் அறிவுரை !
, திங்கள், 8 ஏப்ரல் 2019 (13:21 IST)
இந்திய கிரிக்கெட் கேப்டன் கோஹ்லிக்கு உலகக்கோப்பைக்கு முன்னதாக ஓய்வு அளிக்க வேண்டும் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார்.

12 ஆவது ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாக கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் கோஹ்லியின் கேப்டன்ஷிப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில் இந்த தொடர் தோல்விகள் மனதளவில் கோஹ்லிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் ‘இந்திய கிரிக்கெட் வாரியம் சரியாக திட்டமிட்டு உலகக் கோப்பைக்காக கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உலகக் கோப்பை என்பது பெரிய போட்டி என்பதால் அதற்கு முன்பாக, அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது இன்றியமையாதது’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு தொடர்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதனால் இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா! சென்னையை பின்னுக்கு தள்ளியது