40 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தியர் நாடு கடத்தப்படுகிறாரா? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Siva
செவ்வாய், 4 நவம்பர் 2025 (10:46 IST)
கொலை குற்றச்சாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்பவரை நாடு கடத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமெரிக்காவின் இரண்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. அண்மையில் அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
 
ஒன்பது மாத குழந்தையாக அமெரிக்காவுக்கு வந்த வேதம், 1983ஆம் ஆண்டில் நண்பரை கொன்றதாக ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
 
தற்போது குற்றம் நீக்கப்பட்ட போதிலும், அவர் லூசியானாவில் உள்ள நாடு கடத்தல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
குடியேற்ற மேல்முறையீட்டு வாரியம் வழக்கை மறுபரிசீலனை செய்யும் வரை நாடு கடத்தலை நிறுத்தி வைக்க ஒரு குடியேற்ற நீதிபதியும், பென்சில்வேனியா மாவட்ட நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. இந்த மறுபரிசீலனைக்கு சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments