போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க புதிய செயலி.. உக்ரைன் அரசு அறிமுகம்..!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (14:31 IST)
போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக உக்ரைன் நாட்டு அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
 
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது என்பதும் இதில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. மேலும் போரில் பல குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக ரீயூனைட் உக்ரைன் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. 
 
போரில் பிரிந்த குழந்தைகளின் தகவல்கள் இந்த செயலியில் பதிவு செய்யப்படும் நிலையில் அந்த குழந்தையை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் போரில் காணாமல் போன குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments