Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கும், முதல்வருக்கும் கொலை மிரட்டல்: பள்ளி மாணவன் அதிரடி கைது..

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (14:25 IST)
பிரதமர் மோடிக்கும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும் பள்ளி மாணவர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியில் இயங்கி வரும் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் இமெயில் ஒன்று வந்தது. அதில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரையும் கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 
 
இதனை அடுத்து ஊடக நிர்வாகிகள் போலீசில் புகார் செய்ததை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரணை செய்தனர். அப்போது பிரதமருக்கும் முதல்வருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது 16 வயது பள்ளி சிறுவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
பிளஸ் ஒன் முடிந்து விட்டு பிளஸ் டூ வகுப்பில் சேர இருக்கும் அந்த மாணவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments