Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது – ட்ரம்ப் காட்டம் !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (15:18 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது என தனது டிவிட்டரில் கோபமாகத் தெரிவித்துள்ளார்.

அனுசக்தி ஒப்பந்தம் காரணமாக அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகியுள்ளது. அந்த ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது எனக் கூறி அதை நிராகரித்தார் ட்ரம்ப். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகள் யாவும் அமெரிக்காவுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.

இதுகுறித்து இருநாடுகளும் மோதல் போக்கில் ஈடுபட இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் ‘அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிந்தேதான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நெருப்போடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்’ என ஈரானை மிரட்டும் விதமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு..! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

பட்டா மாறுதல்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி.. கேள்விக்குறியாகும் இந்தியா கூட்டணி..!

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments