Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு வாங்களேன்! – சீன அதிபரை தொடர்ந்து ட்ரம்ப் வருகை!

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (11:57 IST)
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் சீன ஜின் பிங் இந்தியா வருகை புரிந்தார். அரசு முறையற்ற அந்த சந்திப்பில் பிரதமர் மோடி மற்றும் ஜின் பிங் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள், ஒப்பந்தங்கள் குறித்து பேசியிருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபருக்கு போனில் பேசிய பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பதிலுக்கு அதிபர் ட்ரம்பும் இந்திய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அப்போது இந்தியாவுக்கு மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து ட்ரம்ப் இந்திய பயணத்துக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தேதி அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படாத நிலையில் அடுத்த மாதமான பிப்ரவரியில் அவர் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வரும் முன் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியா வந்து பாதுகாப்பு அம்சங்களை பார்வையிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான புதிய ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments