Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலியின் சிறுநீரில் மருத்துவ குணம்.. முடக்கு வாதத்தை குணமாக்கும் என கூறி விற்பனை..!

Advertiesment
Johny Tiger

Mahendran

, வியாழன், 30 ஜனவரி 2025 (13:05 IST)
இந்தியாவில் பசுவின் சிறுநீர் காய்ச்சலை குணப்படுத்தும் என்று ஒரு சிலர் கூறிவரும் நிலையில் சீனாவில் புலியின் சிறுநீர் மருத்துவ குணம் கொண்டது என்றும் இது முடக்குவாதத்தை குணப்படுத்தும் என்றும் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சீனாவில் உள்ள மிருக காட்சி சாலையில் வேலை செய்யும் ஒருவர் புலியின் சிறுநீர்  மருத்துவ குணம் கொண்டது என்று கூறி 250 கிராம் புலியின் சிறுநீர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது 
 
புலியின் சிறுநீரை வெள்ளை ஒயின் உடன் கலந்து குடித்தால் உடல் வலி குணமாகும் என்றும் முடக்கு வாதத்தை இது குணப்படுத்தும் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புலியின் சிறுநீர் கழித்த ஒரு தொட்டியில் இருந்து சிறுநீர் சேகரிக்கப்படுவதாகவும் இதை விற்பனை செய்பவர்கள் கூறியுள்ளனர். மேலும் இதற்கான லைசன்ஸ் இருப்பதால் சட்டபூர்வமாக விற்பனை செய்து வருகிறோம் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் புலியின் சிறுநீரில் எந்தவித மருத்துவ குணங்களும் இல்லை என்றும் இந்த விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பசுவின் சிறுநீர் சர்ச்சை ஏற்படுத்தியது போலவே சீனாவில் புலியின் சிறுநீர்  சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்..!