Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு வழங்கிய பெண் காப்பாளரை இரையாக்கிய சைபீரியன் புலி!!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (13:02 IST)
ரஷ்யாவில் உள்ள மிருககாட்சிசாலை ஒன்றில் உணவு வழங்கிய பெண் காப்பாளர் மீது பாய்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ரஷ்ய மிருககாட்சிசாலையில் உள்ள சைபீரியன் புலி ஒன்றிற்கு உணவு வழங்க பெண் காப்பாளர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த புலி பெண் காப்பாளர் மீது பாய்ந்து அவரை மறைவிடத்திற்கு இழுந்து சென்றது. 
 
இதை கண்ட மக்கள் கூச்சல் எழுப்பியும், அருகில் இருந்த பொருட்களை புலியின் மீது வீசியும் பெண் காப்பாளரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
 
இதனையடுத்து புலி அந்த காப்பாளரை விட்டு சென்றது. பின்னர், சக காப்பாளர்கள் அந்த பெண் காப்பாளரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளானர்.
 
உயிருக்கு எந்த ஆபத்துமின்றி பெண் காப்பாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments