Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிக்காக காத்திருப்பு! – 10 ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தான் வந்த தலீபான் தலைவர்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:51 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் தலீபான் அமைப்பை உருவாகியவர்களில் முக்கிய தலைவர் ஆப்கானிஸ்தான் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் பல நாட்டு மக்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயத்தங்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை ஆதரிப்பதாக சீனா, ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்னதாக ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி மறைந்திருந்த தலீபான் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கனி பராதர் ஆப்கானிஸ்தானிற்குள் வந்துள்ளார். கந்தகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு தலீபான்கள் உற்சாக வரவேற்பு அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் வருகையை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் புதிய அரசு மற்றும் அமைச்சரவை குறித்த அறிவிப்புகள் எந்நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments