Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (17:51 IST)
பெற்றோர்கள் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் அவர்களது குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்காவின் பல்கழைக்கழக நிபுணர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
 
உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் நல்லது, கெட்டது என இரண்டுமே தொடர்ச்சியாக நிகழ்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் அதிவேக வளர்ச்சி தான் ஸ்மார்ட்போன்.
 
இந்த ஸ்மார்ட்போன் மக்கள் கையின் விரல்நுனியில் இருந்து நிறைய வேலைகளை சர்வசாதரணமாக எளிதல் செய்து வருகிறது. ஆனால், இதை மக்கள் அறிவுப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவதை விட தேவையற்றவைகளுக்கு அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 
 
குறிப்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை விட, ஸ்மார்ட்போனுடன்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதை கண்டு குழந்தைகளும், தங்களது பெற்றோர்கள் போலவே ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் குழந்தைகளின் உடல்நலமும், படிப்பும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் இல்லினாய்வ் மாகாண பல்கலைக்கழகம், மிக்சிகன் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments