Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவூதி அரேபியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 20 பேர் பலி

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (20:35 IST)
சவூதி அரேபியாவின் தெற்கு மாகாணமான அசிரியில் மெக்காவுக்கு சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. இதில், 20 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகிறது.

சவூதி  அரேபியாவில் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஆசிரில் என்ற பகுதியைச் சேர்ந்த சேர்ந்த  இஸ்லாமிய பக்தர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மெக்கா என்ற புனித பயணத்திற்கு ஒரு பேருந்தில் சென்றனர்.

அப்போது, ஒரு பாலத்தில் சென்றபோது, பேருந்து, ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

உடனே பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், பேருந்தில் சென்ற 20 பேர்  உயிரிழந்தனர்.

மீதமுள்ள 29 பேர் படுகாயமடைந்த நிலையில், அருகிலுள்ளோர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியான 20 பேரும் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments