Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவூதி அரேபியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 20 பேர் பலி

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (20:35 IST)
சவூதி அரேபியாவின் தெற்கு மாகாணமான அசிரியில் மெக்காவுக்கு சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. இதில், 20 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகிறது.

சவூதி  அரேபியாவில் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஆசிரில் என்ற பகுதியைச் சேர்ந்த சேர்ந்த  இஸ்லாமிய பக்தர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மெக்கா என்ற புனித பயணத்திற்கு ஒரு பேருந்தில் சென்றனர்.

அப்போது, ஒரு பாலத்தில் சென்றபோது, பேருந்து, ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

உடனே பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், பேருந்தில் சென்ற 20 பேர்  உயிரிழந்தனர்.

மீதமுள்ள 29 பேர் படுகாயமடைந்த நிலையில், அருகிலுள்ளோர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியான 20 பேரும் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments