Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ராணுவ விமானம் விபத்து: 15 பேர் பரிதாப பலி

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (06:49 IST)
பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான சிறிய வகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பரிதாப பலியாகியுள்ளனர். மேலும் விமானத்தின் பைலட்டுக்கள் இருவரும் பலியாகியுள்ளனர்.
 
இன்று அதிகாலை பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே பாகிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த பகுதியில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டதால் இந்த தீயில் கருகி பொதுமக்கள் சிலர் பலியானதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் காயம் அடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது
 
இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்துக்கு எந்தவித சதியும் காரணம் இல்லை என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments