Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புலம்பெயர் மக்களின் ஒரே நம்பிக்கை கமலா ஹாரிஸ்; ட்ரம்பை வெளுத்துவிட்ட ஜோ பிடன்!

புலம்பெயர் மக்களின் ஒரே நம்பிக்கை கமலா ஹாரிஸ்; ட்ரம்பை வெளுத்துவிட்ட ஜோ பிடன்!
, சனி, 22 ஆகஸ்ட் 2020 (08:38 IST)
அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ஜோ பிடன், ட்ரம்ப் இடையேயான வார்த்தை மோதல்கள் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக இரண்டாவது முறையாக ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரங்கல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பிறகு மக்களிடையே உரையாற்றிய ஜோ பிடன் ”அமெரிக்காவை அனைவரும் இணைந்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. அமெரிக்காவின் இருண்ட காலம் விரைவில் முடிவடைய உள்ளது. கறுப்பின பெண்கள், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் குரலாக கமலா ஹாரிஸ் மாறியுள்ளார்” என கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகள், சுற்றுசூழல் சீர்கேடு, பொருளாதார பாதிப்பு போன்றவற்றில் ட்ரம்ப் மேற்கொள்ளாமல் விட்ட பணிகளை தான் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது இடத்தில் சிலை வைக்கமாட்டோம்.. ஆனா..! – ட்ரிக்காய் யோசித்த இந்து முன்னணி!