Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சொட்டு தண்ணி இல்ல.. 70 ஆண்டுகளில் காணாத வறட்சி! – இத்தாலியில் அவசரநிலை!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (08:59 IST)
இத்தாலியில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மக்கள் தண்ணீருக்கு தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் வெயில் மோசமாக வாட்டி வருகிறது. இதனால் அந்நாட்டின் நீர்நிலைகள் பல சுத்தமாக வறண்டு விட்டதால் அந்நாடு கடும் வறட்சியில் சிக்கியுள்ளது. முக்கியமாக இத்தாலியின் லோம்பார்டி, எமிலியோ ரொமாக்னா, பிரியூலி வெனிசியா, பீட்மாண்ட் மற்றும் வெனேட்டோ ஆகிய வடக்கு பிராந்தியங்களில் விவசாயத்திற்கு கூட தண்ணீர் இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் மிக நீளமான நதியான போ நதியே வறண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வறட்சிக்கான அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரடையாத பட்சத்தில் அரசு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments