Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணைக்கைதிகளை உயிருடன் மீட்டது இஸ்ரேல்! – காசாவில் அதிரடி ஆப்பரேஷன்!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (13:08 IST)
இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடத்திக் கொண்டு சென்ற மக்களை உயிருடன் மீட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.



பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல ஆண்டு காலமாக மோதல் இருந்து வரும் நிலையில் நேற்று ஹமாஸ் அமைப்பினர் திடீரென 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தரை வழியாக இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லையோர நகரமான ஒபாகிமில் இருந்து ஏராளமான மக்களை பிணைக்கைதிகளாக கடத்திக் கொண்டு சென்றனர். ஏராளமானோரை சுட்டுக் கொன்றனர்.

பிணைக்கைதிகளை மீட்கும் அதிரடி ஆபரேஷனில் இறங்கிய இஸ்ரேல் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலிலும் ஈடுபட்டது. காசா முனையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய பதுங்குதளம் தாக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் பிணையக்கைதியாக பிடிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பலரையும் சுட்டுக் கொன்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments