போர் எதிரொலி: ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தல்

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (12:44 IST)
இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜெருசலேம் புனித பயணத்தை பலர் தொடர்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டு போர் நடந்து வருவதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் என்றும், போர் முடிவுக்கு  வந்து இயல்பு நிலை திரும்பியதும் தூதரகம் மூலம் தமிழர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் 30 பேரை தொடர்பு கொண்டு பேசியதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments