Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அமைச்சரவையில் ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தியின் மருமகன்

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (06:03 IST)
தமிழ்நாட்டை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று ஒருசிலர் கூறிவரும் நிலையில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் முக்கிய பதவிகளில் வகித்து வருகின்றனர். இந்த நிலையில்  இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை மந்திரி பதவி வழங்கியுள்ளார்

இங்கிலாந்து அமைச்சரவையில் துணை மந்திரி பதவி பெற்றுள்ள ரிஷி சுனக் மற்றும் சுயல்லா பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது குறித்து நடந்த பொதுவாக்கெடுப்பின்போது பிரதமருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

37 வயதான ரிஷி சுனக் என்பவர் ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின்  மகள் அக்‌ஷதாவை திருமணம் செய்து கொண்டவர் என்பதும் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி. என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு வீட்டு வசதித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை வழங்கப்பட்டுள்ளது.

இன்னொரு மந்திரியான 37 வயதான சுயல்லா பெர்னாண்டஸ் என்பவர் கோவாவை பூர்வீகமாக கொண்ட பெண் ஆவார். இவர் பார்ஹாம் தொகுதி எம்.பி. ஆக இருந்து வருகிறார். இவருக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments