Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் திருநாள்: பள்ளிகளுக்கு ஜனவரி 12ஆம் தேதி விடுமுறை

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (04:55 IST)
இந்த ஆண்டு போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வருகிறது. மேலும் மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் திங்கள் செவ்வாய் வருவதால் உண்மையில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக் காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக, வருகின்ற 12.01.2018 (வெள்ளி) அன்று விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஜனவரி 12ஆம் தேதி வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments