Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலி

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (08:42 IST)
ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாரா விதமாய் திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 12 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 5 பேர் சம்பவ இடத்திலே பலியாகிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிக்கிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments