Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2025ல் மீண்டும் கொரோனா வரும்? – ஹார்வர்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (08:21 IST)
தற்போது லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உலகையே முடக்கியுள்ள கொரோனா மீண்டும் 2025ல் வலுவடையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் சில மாதங்களிலேயே உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலிக் கொண்டுள்ளது. மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவில் நிலைமை கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது.

ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமான உயிர்பலிகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் சீனாவில் குறைந்துள்ள இந்த வைரஸ் நவம்பர் மாதம் முதல் மீண்டும் பரவ தொடங்கலாம் என சீன விஞ்ஞானிகள் சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஹார்வர்டு விஞ்ஞானிகள் கொரோனா குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனா முழுவதும் கட்டுப்படுத்தப்படாமல் ஊரடங்கை தளர்த்துவது ஆபத்து என்றும், தற்போதைக்கு கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தாலும் 2025ல் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments