Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தாண்டு இந்த நாட்டில்தான் ஜி20 மாநாடு!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (13:14 IST)
டெல்லியில்    ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட  பல உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் 

நேற்று தலை நகர் டெல்லியில் தொடங்கிய ஜி 20  மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த உலகத் தலைவர்கள் இன்று காலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செய்தனர்.

இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவுக்கு கிளம்பினார்.

இந்த நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்கிறது. இதற்காக பொறுப்பை இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவிடம் ஒப்படைத்தார்.  அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு பிரேசில் வசமாகவுள்ளது.

எனவே  அடுத்த வருடம் ரியோ டி ஜெனியோவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும்படி இஉலகத் தலைவர்களுக்கு பிரேசில் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments