Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் டெங்கு காய்ச்சல்; 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:47 IST)
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழகத்தில் மழை காலம் வந்தாலே பருவ நோய்களான டெங்கு, மலேரியா போன்றவற்றிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்படுகின்றன. சமீப காலமாக சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் பருவ காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சென்னை மதுரவாயல் பகுதியில் 4 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பருவ வியாதிகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments