Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபரா இருந்தாலும் சட்டம் ஒன்னுதான்..! ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ சோதனை!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (08:54 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்த விவகராம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் அதிபராக தற்போது இருந்து வருபவர் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு கடந்த 2009 முதல் 2016 வரை அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகவும் ஜோ பைடன் பதவி வகித்திருந்தார்.

அந்த சமயத்தில் உள்ள அரசின் ரகசிய ஆவணங்களை திருடி தனது வீட்டில் வைத்திருந்ததாக ஜோ பைடன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள எஃப்.பி.ஐ அமைப்பு அதிபர் ஜோ பைடனின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் பல ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவற்றை பதுக்கி வைத்திருந்தது குறித்து ஜோ பைடனிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments